• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விரைவில் ஐ.ஆர்.சி.டி.சியின் “Buy Now Pay Later”

May 31, 2017 தண்டோரா குழு

ஐ.ஆர்.சி.டி.சி சேவையைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட் வாங்குவோர் உடனே பணம் செலுத்தாமல், அந்த தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மும்பையை சேர்ந்த பின்டெக் நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துடன் சேர்ந்து ” Buy Now Pay Later சேவையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் டிக்கெட் வாங்குவோர் உடனே பணம் செலுத்தாமல், அந்த தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தலாம்.

இது குறித்து ஈபே லேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஆக்ஷத் சக்ஸ்சேனா கூறுகையில்,

“இந்த சேவையை செயல்படுத்த, ஒருமுறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை சமர்ப்பித்து, ஒன் டைம் பாஸ்வோர்ட் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள பரிமாற்றங்கள், சமூக வலைத்தளம் ஆகியவற்றை உறுதி செய்த பிறகு வழங்கப்படும். தனிநபர் வங்கியில் கடன்போன்றது இந்த சேவை. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் பணம் செலுத்த தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க