• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விளம்பரத்திற்காக நகரத்தைத் திருமணம் செய்தவர்!

April 23, 2016 தண்டோரா குழு

மேலை நாடுகளில் தற்போது பல்வேறு நிறுவனங்களுக்குள் போட்டிகள் அதிகரித்து விட்டன. இதையடுத்து அங்கு விளம்பரப்படுத்துவதில் அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக்கொண்டு வித்தியாசத்தை காட்டி வருகின்றனர். இதில் பீச்சா நிறுவன மேலாளர் ஒருவர் ஒரு படி மேலே போய் தன்னுடைய நிறுவனத்திற்கு விளம்பரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு நகரத்தைத் திருமணம் செய்துள்ளது வேதனை கலந்த வேடிக்கையான விசயமாக உள்ளது.

இந்த வேடிக்கையான சம்பவம் நடந்தது பிரிட்டனில். அலெக்ஸ் ப்ரிட்லே(31) என்பவர் டொமினோஸ் பிட்சா மேலாளர். இவர் தன்னுடைய நிறுவனத்தின் வியாபாரத்தை பெருக்குவதற்காக ஸ்டோன் என்னும் ஒரு நகரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தின் வாயிலாக, அந்த நகரத்தோடு ஒரு தனிப்பட்ட ஈடுபாட்டை ஏற்படுத்திக்கொண்டதாக அவர் கூறினார். அவரது திருமணம், ஒரு பாதிரியாரால் முறையாக நடத்திவைக்கப்பட்டது.

திருமண உடையில், கெம்பீரமாக அலெக்ஸ் தோன்றியது காண்பவர்களை மிகவும் கவர்ந்தது. பாதிரியார் தம்பதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி வாழ்த்தினார். இதையடுத்து லிச்பீல்ட்ரோடு என்னும் இடத்தில் ரெவரண்ட் ஜான் என்பவர் தம்பதிகளுக்கு காகித மலர்கள் தூவி நல்லாசியை வழங்கினார். பின்பு ‘ஐ தோ’ என்று எழுதி இருந்த ஒரு பிட்சாவை தம்பதியருக்குப் பரிசளித்தார்.

இதன்மூலம் அலெக்ஸ் தனது பிஸ்சா நிறுவனத்துக்கு அதிக வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
மேலும் கூறுகையில், ஸ்டோன் நகர இளைஞர்களுக்குத் தனது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

ஏப்ரல் 25, திங்கள்கிழமை, முதல் இந்த பிச்சா நிறுவனம் தனது முதல் ‘டேக்கவே சேவை’யை ஸ்டோன் நகரத்தில் துவங்க உள்ளது.

புதிதாகத் துவங்க இருக்கிற இந்த புதிய கிளைக்கான வேலையில் அலெக்ஸ் மற்றும் அவருடைய அணி மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஸ்டோன் நகரில் துவங்க உள்ள இந்தக் கிளைக்காக சுமார் 30 புதிய பணியிடங்களை டொமினோஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. பிட்சா தயாரிப்பாளர், மற்றும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் பணியும் இதில் அடங்கும். ஆனால், பிஸ்ஸாவை வீடுகளுக்கு விநியோகம் செய்ய சரியான ஆட்களைத் தேடி வருகிறார்கள்.

ஸ்டோன் நகரில் தங்களுடைய புதிய சேவையை துவங்குவது ஒரு தனி சுகத்தைத் தருவதாகவும், வேலைக்கான காலியிடங்கள் தங்களிடம் இன்னும் இருப்பதால் அதை நிரப்ப உள்ளூர் மக்களிடம் அல்லது பகுதிநேர வேலையைத் தேடுபவர்களிடம் இருந்து பதிலை எதிர்பார்த்து கொண்டு இருப்பதாகவும் அலெக்ஸ் தெரிவித்தார்.

மேலும் அலெக்ஸ் கூறுகையில், முழுமை, நேர்மை, மற்றும் நம்பகத்தன்மையை நிரூபிக்க விரும்புபவர்கள் தான் வாடிக்கையாளர் சேவையை சரியாக வழங்க முடியும் என்றார்.

மேலும் படிக்க