July 11, 2017
தண்டோரா குழு
உலகில் அளவில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
ஆனால் இன்றளவும் வெறும் 11 பேர் மட்டுமே வாழ்ந்து வரும் ஒரு நாட்டில் ராஜா ஆட்சி செய்து வருகிறார். ஆம்! அது சர்தீனியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள தவோலாரா தீவு தான்.
உலகின் மிகச் சிறிய சாம்ராஜ்ஜியமாக அழைக்கப்படும் தவோலாரா தீவு இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டது. இத்தீவின் மொத்த பரப்பளவே ஐந்து சதுர கிலோ மீட்டர் தான்.
இக்குட்டி தீவின் மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். இதில் ஆச்சரியப்படும் விஷயமே இங்கு ஒரு ராஜா ஆட்சி செய்து வருவது தான். ராஜாவின் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி. இவர் உணவு விடுதியை நடத்துகிறார். தவோலாரா சாதாரண கால்சட்டை அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டது.


ராஜாவை காணவேண்டும் என்றால் அப்பாயிண்மெண்ட்லாம் வாங்க தேவையில்லை. ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசர்,இதுமட்டுமின்றி தன் தீவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டி சுற்றி காண்பிப்பார்.
உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடுகள் உள்ளன. இதை காண்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.