March 1, 2025
தண்டோரா குழு
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் வளர்ச்சியைத் தூண்டிய தனிநபர்களுக்கு தமிழக தொழில் முனைவோர் விருது வழங்கும் விழா கோவை ப்ரூக்ஃபீல்டு வளாகத்தில் நடைபெற்றது.இதில் 24 தொழில் முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வணிக விருதுகள் என்பது தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் நிறுவனங்கள், சிறந்த தொழில் முனைவோர் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் இளைஞர்களுக்கு மாநில அளவில் சிறப்பான செயல்பாடுகளின் அடிப்படையில் நிபுணர்கள் குழு தேர்வு செய்ததன் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தொழில்துறையில் சாதித்து வரும் முன்னணி நிறுவங்கள் இளைய தலைமுறையினரின் புதுமை மற்றும் நவீன கண்டுபிடிப்புகளை கொண்டாடும் மதிப்புமிக்க அங்கீகாரத் திட்டமாகும். இந்த விருதுகள்,மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, வளர்ச்சியைத் தூண்டும் சிறந்த வணிகங்கள் மற்றும் தனிநபர்களை கவுரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு வணிக விருதுகள் பல நோக்கங்களுக்காக வழங்கப்படுகின்றது.
1.வணிகச் சிறப்பை அங்கீகரித்தல்: அந்தந்த தொழில்களில் சிறப்பான செயல்திறன்,புதுமை மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்திய வணிகங்களை விருதுகள் அங்கீகரித்து வெகுமதி அளிக்கின்றன.
2.தொழில் முனைவோரை ஊக்குவித்தல்: விருதுகள் தமிழ்நாட்டில் தொழில் முனைவோரை ஊக்குவித்து ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3.பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல்:
புதிய வளர்ச்சிக்கு வித்திடும் வர்த்தக நிறுவனங்களை அங்கீகரித்து கொண்டாடுவதன் மூலம், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவும் நிறுவனங்களுக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும்.
4.நெட்வொர்க்கிங்கிற்கான ஒரு தளத்தை வழங்குதல்:விருது வழங்கும் விழா வணிகத் தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் புதிய வர்த்தக பாதைகளை திறப்பதற்கான யோசனைகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் வேகமான வளர்ச்சிக்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
ஒட்டுமொத்தமாக,தமிழ்நாடு வர்த்தக விருதுகள் என்பது தமிழ்நாட்டின் வர்த்தக சிறப்பை உவகம் அறிய செய்வதோடு, புமாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட உதவும்.
விருது பெறும் தொழில்நிறுவங்கள் மற்றும் தொழில் முனைவோர் பட்டியலில் உள்ளபடி
கோயம்புத்தூரில் உள்ள பிஏஎம் நிறுவனம் சார்பில் விருதுகள் வழங்கப்படுகிறது.