• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹைதராபாத் தொழிற்சாலையில் தீ விபத்து, 6 பேர் பலி

February 22, 2017 தண்டோரா குழு

குளிர்சாதனக் கருவி தயாரிப்புத் தொழிற்சாலையில் புதன்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி இறந்தனர்.

ஹைதராபாத், ராஜேந்திரா நகர் காவல் நிலைய எல்லையில் உள்ள உப்பேர்பள்ளி என்னும் இடத்தில் இவோன் பேட்டரி நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

“அட்டப்பூர் என்ற பகுதியில் அமைந்த அந்த ஆலையில் அதிகாலை 5 மணியளவில் புகையுடன் தீ வருவதைக் கண்டோம். உடனடியாகத் தீயணைப்புக் கருவிகள் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், உள்ளே இருந்து ஆறு பேரின் கருகிய உடல்களைத்தான் கொண்டு வர முடிந்தது” என்று காவல் துறை துணை ஆணையர் பி.வி. பத்மஜா தெரிவித்தார்.

உயிரிழந்த 6 பேரில் 4 பேருடைய அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் சதாம்கான், சாது, இர்ஃபான்கான், அயூப்கான் ஆவர். உயிரிழந்தவர்கள் சத்தீஸ்கர் மற்றும் பிஹார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற இரண்டு பேரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் தெரியவில்லை.

“தீயை அணைக்க 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் உயிரிழந்த 6 பேருடைய உடல்கள் பிரேத சோதனைக்காக உஸ்மானியா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தீவிபத்துக்கு ஆளான நிறுவனத்தில் பொதுவாக நான்கு தொழிலாளர்கள்தான் இருப்பர். ஆனால், செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு பேர் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். அந்நிறுவனத்தைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் உள்ளன.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற்சாலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது” என்று காவல் துறை அதிகாரி பத்மஜா தெரிவித்தார்.

மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் அவர்.

மேலும் படிக்க