• Download mobile app
05 Feb 2025, WednesdayEdition - 3283
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காஷ்மீர் ‘பெல்லட்’ பாதிப்பில் 14% பேர் 15 வயதுக்குட்பட்டோர்

August 22, 2016 தண்டோரா குழு

காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்டவர்களில் 14 சதவீதத்தினர் 15 வயதுக்குக் குறைவானவர்களாக உள்ளனர்.

எட்டு வயதான ஜூனைத் அகமத் காஷ்மீரில் பெல்லட் துப்பாக்கியால் பாதிக்கப்பட்ட சமீபத்திய சான்றாகியுள்ளார்.நேற்று மாலை ஜூனைத் அகமத் பாதுகாப்பு படையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.

இது குறித்து ஜூனைத்தின் உறவினர் ஒருவர் கூறும்போது,‘ஜூனைத் அகமத் தனது வீட்டின் அருகே குழுமியிருந்த கூட்டத்தினரோடு நின்று கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த பாதுகாப்பு படையினரின் வண்டியைக் கண்டு அலறியுள்ளான்.அவனது வயதைக் கூட பொருட்படுத்தாமல் பாதுகாப்பு படையினர் பெல்லட் கன்னால் அங்குக் குழுமியிருந்தவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர்.

இந்த தக்குதலால் ஜீனைதின் மார்பு பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,கடந்த ஜுலை மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய தலைவராக இருந்த புர்கான் வானி கொல்லப்பட்டது முதல் காஷ்மீரில் கலவரங்கள் ஏற்பட்டு வருகிறது.

கலவரங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பெல்லட் துப்பாக்கிகளை பயன்படுத்துகிறார்கள்.இதனால் பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெல்லட் துப்பாக்கிகளால் பாதிக்கப்பட்டவர்களில் 14% பேர் ஜுனைத் அகமத்தை போன்று 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூனைத்துக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பேசும் போது, அவனது மார்பின் பல பகுதிகளில் பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

ஒரு வேளை ஜூனைத் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மிக அருகில் நின்றிருந்தான் என்றால் அவன் நுரையீரல் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், இதுவரை காஷ்மீரின் 10 மாவட்டங்களிலிருந்து பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மாதத்தில் மட்டும் சுமார் 933 பேர் பெல்லட் துப்பாக்கி தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ மகாராஜ் ஹரி சிங் மருத்துவமனை கண் மருத்துவர் சஜத் கான்டே கூறும் போது, 440 பேருக்கு பெல்லட் துப்பாக்கி தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.இதில் சுமார் 70க்கு மேற்பட்டோர் 15 வயதுக்குக் குறைவானவர்கள்.

இவர்களில் சுமார் 40 பேருக்குக் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மேலும், 250 பேருக்குச் சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்.

வயதானவர்களைக் காட்டிலும் சிறு வயதினருக்கு அறுவை சிகிச்சை செய்வது கடினமாக உள்ளது என்று வேதனையோடு தெரிவித்தார்.

மேலும் படிக்க