• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நேற்று இரவு வானில் காணப்பட்ட பச்சை நிலவு.

April 22, 2016 தண்டோரா குழு

“Once in a blue moon while” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. மிக அரிதாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட, இவ்வாறு சொல்வதுண்டு.

இந்தப் பழமொழிக்கு பின்னல் ஒரு அறிவியல் சங்கதி உண்டு. மாதம் தோறும், பௌர்ணமி நிலவு தோன்றினாலும், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட பௌர்ணமி நிலவு நீல நிறத்தில் தோன்றும். அது போல என்றாவது ஒரு நாள் நடைபெறும் நிகழ்வை அவ்வாறு கூறுவது வழக்கம்.

அதற்கு இப்போது என்ன என்று கேட்கிறீர்களா? நீல நிற நிலவு அரிதென்றால் நேற்று இரவு நிலவு பச்சை நிறத்தில் தோன்றியது அரிதிலும் அரிதான நிகழ்வு. உண்மை தான். பச்சை நிலவும் சாத்தியமே. இதனைக் கூறுவது அறிவியலாளர்கள். நேற்று பௌர்ணமி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாம் வாழும் அண்டத்தில், எண்ணிலடங்கா கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள், ஒரு சீரிய நீள்வட்ட வடிவில் ஒன்றை ஒன்று மோதாமல் சுற்றி வருவது தெரிந்ததே.

நம் சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் சில எப்போதாவது அருகருகே வரும். அப்படியான ஒரு அப்பூர்வ நிகழ்வு, நேற்று காணப்பட்டது, அவ்வாறு வரும்போது வளிமண்டலத்தில் அதிகப்படியான தூசிகள் இருக்கும். அவை சூரிய ஒளியை பரதிபலிக்கும்.

நிலவும் எப்போதும் போல் தன் மீது விழும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும். அப்போது ஒரு நிறக்கலவை உருவாகும். பூமிக்கு அருகே உள்ள நிலவு மீது இந்த நிறக்கலவை தனது தாகத்தை ஏற்படுத்தும். அப்போது நிலவு பச்சை நிறமாகத் தோன்றும்.

அறிவியல் கோட்பாடுகள் இது சாத்தியம் என்று கூறும் அதே வேளையில், சில குறிப்பிட்ட சமுதாயத்தினர் இது உலக முடிவிற்கு அறிகுறி என்றும் செய்தி பரப்பி வருகின்றனர். மேலும் பலபல சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெவ்வேறு அறிவியலாளர்கள் பச்சை நிலவு பற்றி எதிரெதிர் கோட்பாடுகள் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்பிடியோ, இந்த இரண்டு விஷயங்களையும் மனதில் கொண்டு நம் தண்டோரா குழு, நேற்று சித்ரா பௌர்ணமி நிலவை நோட்டமிட்டது…. இதோ உங்கள் பார்வைக்கு அந்தப் பதிவு.

மேலும் படிக்க