May 19, 2017
தண்டோரா குழு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தமிழக அரசின் டெல்லி ஆலோசகராக நியமிக்கப்பட்ட பவன் ரெய்னா பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவருக்கு டெல்லியில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தில் அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக, லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் இவரது பெயரும் அடிபட்டது. இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும்,ராஜினாமா கடிதத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரால் நியமிக்கப்பட்ட பல ஆலோசகர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.