• Download mobile app
29 Apr 2025, TuesdayEdition - 3366
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரின் உடல் கண்டெடுப்பு

August 3, 2017 தண்டோரா குழு

ஜெனீவாவில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன ஜெர்மன் நாட்டை சேர்ந்தவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 25-ம் தேதி, ஆல்ப்ஸ் மலையின் லாக்கின்ஹோர்ன் என்னும் பகுதியில் 2 பேர் மலை ஏறியுள்ளனர். மலை சிகரத்தை அடையும் சிறிது தூரத்திற்கு முன்னதாக அவர்கள் ஒரு மனிதரின் கை மற்றும் காலணிகளை பார்த்துள்ளனர்.இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் தந்துள்ளனர். மீட்பு பணியினர் அந்த மலைபகுதிக்கு சென்று, அந்த மனிதருடைய உடலை அங்கிருந்து எடுத்து, பெர்ன நகரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அந்த உடலை பரிசோதனை செய்ததில் அதற்கு வயது 74 இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த உடல் கடந்த 1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி அல்ப்ஸ் மலையில் ஏறி காணாமல் போனவரின் உடல் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில், 1942-ம் ஆண்டு அல்ப்ஸ் மலையில் ஏறி, சுமார் 70 ஆண்டுகள் காணாமல் போன தம்பதியினருடைய உடல் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க