• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

5 சதவீதம் ஊக்கத்தொகை பெற இன்றும், நாளையும் கடைசி வாய்ப்பு கமிஷனர் மு.பிரதாப் அறிவிப்பு

April 29, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய நடப்பு 2023-24ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியினை 30.04.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு தங்களது சொத்து வரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். கடைசி வாய்ப்பாக இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இதுதவிர, அந்தந்த வார்டுகளில் சிறப்பு வரி வசூல் முகாம் மேற்கண்ட இரு தினங்களும் நடைபெறுகிறது.

எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, சொத்துவரியை முறையாக செலுத்தி, மாநகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க