• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து, 7 குழந்தைகள் பலி

July 25, 2016 தண்டோரா குழு

வட இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் படோஹி என்னும் இடத்திற்கு அருகில் இருக்கும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகினர், 12 குழந்தைகள் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படோஹி அருகே உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெண்டர் ஹார்ட் பப்ளிக் ஸ்கூல் வாகனத்தின் மீது அந்த வழியாக வந்த அலகாபாத், வாரணாசி பயணிகள் ரயில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த 19 குழந்தைகளில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதை அறிந்த போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு வந்து சேர்ந்த அவர்கள் காயம் அடைந்த குழந்தைகளை பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான ஜீவன்தீப், ஜீவன்தாரா மற்றும் காயன்பூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையின் போது, ரயில் வருவதற்கான எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டும் தண்டவாளத்தை கடக்க வேன் டிரைவர் முயற்சி செய்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க