• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு கோடி பணம் மற்றும் தங்க பிஸ்கட்களுடன் சென்ற ரயில் பயணி மர்ம மரணம்

August 21, 2016 தண்டோரா குழு

ராய்ப்பூரிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற ரயில் பயணி ஒருவர் ரயிலில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.அவர் வைத்திருந்த பையில் 99 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 தங்க பிஸ்கட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மும்பை சிஎஸ்டி ஹவுரா கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுபாஷ் சந்த் சுரானா(55) என்பவர் பயணித்தார்.ரயில், டாடாநகர் ரயில் நிலையத்தைத் தாண்டியதும் சுயநினைவின்றி அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்த சக பயணிகள் ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், சுரானா மரணமடைந்தார்.அவர் மரணம் குறித்து விசாரணை செய்த ரயில்வே காவல்துறையினர் முதலில் மர்ம மரணம் எனக் கருதினர்.பின்னர் மருத்துவர்கள் உதவியுடன் நடத்திய சோதனையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, உடைமைகளை சோதனை செய்த போது, அவர் பையில் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 3 தங்க பிஸ்கட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த பணம் குறித்தும், தங்க பிஸ்கட்கள் குறித்தும் மேற்கு மிட்னாப்பூர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.மேலும் சுரானா மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்க தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க