• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டார் ஃபரூக் அப்துல்லா.

May 30, 2016 தண்டோரா குழு

நேஷனல் கான்பரன்ஸ் தலைவர் ஃபரூக் அப்துல்லா தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த சமயத்தில் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். பதவியேற்பு விழாவின்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த ஃபரூக் அப்துல்லா எழுந்து நின்று கொண்டு தனது கைப்பேசியில் யாருடனோ பேச ஆரம்பித்துவிட்டார்.

இதைக் கண்ட சக நண்பர்கள் அப்துல்லாவின் செயலைக் கண்டித்துள்ளனர். இது வருந்தத் தக்க செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தேசிய கீதத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை என்றும். தன்னுடைய செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும் படிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் எப்பொழுதும் இந்தியாவின் பக்கம் பேசுவதாகவும், ஆதரிப்பதாகவும், பலரும் தன்னை குற்றம் சாட்டியிருக்கிறனர். அவ்வாறிருக்கத் தன்னை இவ்வாறு அவதூறு கூறுவது எந்தவிதத்திலும் பொருந்தாது என்று கூறியுள்ளார்.

அப்துல்லா அவர்கள் பிரிவினைவாதிகளுடன் தேசிய கீதத்தைப் பற்றிப் பேசியிருக்கக்கூடும் என்று பி.ஜே.பி தலைவர் ஷைனா கூறியுள்ளார்.

தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் அவமதிப்பது நாட்டையே அவமதிப்பதாகும். ஒவ்வொரு பிரஜையும் ஆர்டிகிள் 51 ஏ (எ) சட்டப்படி தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் மதிப்பது அவசியம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இரு பத்திரிகையாளர்களை தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காத காரணத்திற்காக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களை வெளியேற்றிய சம்பவம் நினைவிருக்கலாம்.

மேலும் படிக்க