• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குருகுலப் பள்ளி மாணவனின் ஒப்பற்ற சாதனை

August 1, 2016 தண்டோரா குழு

அகமதாபாத்திலுள்ள ஹேம்சந்திரசார்ய சான்ஸ்கிரிட் பத்ஷலா எனும் குருகுலப் பள்ளியில் பயிலும் துஷார் டலவட் என்னும் 14 வயது மாணவன் சர்வதேச அளவில் நடைபெற்ற கணித போட்டியில் வெற்றி பெற்றது, குருகுலவாசத்தின் புகழ் இன்னும் குன்றவில்லை என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தப் போட்டி இந்தோனேசியாவின் யொக்யகர்டாவில் ஜூலை24ம் தேதி அபாகஸ் லேனிங்க் ஆஃ ஹையர் அரித்மெடிக் இன்டெர்னேஷனல் (ALOHA) என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. 18 தேசத்தைச் சேர்ந்த 1,300 மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

கடுமையான போட்டிகளையும் தாண்டி வென்ற துஷார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மனொஜ் டிவாரி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் தனது வேகமாகக் கணக்கிடும் திறமையை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் குஜராத்தில் நடைபெற்ற போட்டியில் 70 கேள்விகளுக்கான விடையை 3 நிமிடம் 30 நொடியில் அளித்து 5,300 போட்டியாளர்களைத் தோற்கடித்துள்ளார்.

இவரது சாதனை மொத்த நாட்டை மட்டுமின்றி, குருகுலவாசக் கல்வி முறையையும் பெருமைப்படுத்தியுள்ளது என்று RSS உடன் இணைந்த BSM (பாரதீய ஷிக்ஷன் மண்டல்) அமைப்பின் துணைச் செயலர் முகுல் கனிட்கர் தெரிவித்துள்ளார். மேலும் தொன்மை மிக்க வேத கணிதம் இம் மாணவனின் சாதனை மூலம் மீண்டும் உலகளவில் பிரகாசித்துள்ளது என்றும் கூறினார்.

குருகுலவாசக் கல்வியில் தற்போது வரை எந்தவிதமான பட்டச் சான்றிதழ்களும் வழங்கப்படுவதில்லை. சில வருடங்களுக்குப் பிறகு அவை அமுல் படுத்தப்படலாம். ஆனால் இங்குப் பயிலும் மாணவர்கள் தேசிய திறந்த வெளிப் பாடசாலைகளின் மூலம் தேர்வு எழுதி பட்டங்கள் பெறலாம் என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க