• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெல்லித்தோப்பில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் பிரசாரம்

November 10, 2016 தண்டோரா குழு

புதுச்சேரியில் நெல்லித்தொப்பு தொகுதிக்கு நவம்பர் 19-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் களத்தில் அதிமுக, காங்கிரஸ் என பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் சார்பாக தற்போதைய புதுச்சேரி முதலமைச்சர் வி. நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. அதிமுக சார்பில் ஓம் சக்திசேகர் போட்டியிடுகிறார். அவருக்கு எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

அதைத் தொடர்ந்து நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக புதுவை எதிர்க்கட்சித் தலைவர் என். ரங்கசாமி இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பிள்ளைத்தோட்டம் பகுதியில் ஆனந்தமுத்து மாரியம்மன் கோயில் பகுதியில் புதன்கிழமை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சத்தியா நகர், வெண்ணிலா நகர், பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தார்.

மேலும் படிக்க