• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா சமாதிக்கு நடிகர் அஜித்குமார் அஞ்சலி

December 7, 2016 தண்டோரா குழு

திங்கள்கிழமை மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடிகர் அஜீத் குமார் புதன்கிழமை அதிகாலையில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்களன்று (டிசம்பர் 5) தேதி இரவு 11.30 மணிக்கு காலமானார். செவ்வாயன்று மாலை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு அருகே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜீத் சென்னைக்கு வர முடிவு செய்தார். ஆனால், அவருக்கு தொடர்ச்சியான விமான சேவை கிடைக்கவில்லை. அதனால், இரங்கல் செய்தியை அனுப்பினார்.

புதனன்று காலை 4.30 மணிக்கு சென்னை வந்த அஜித் நேராக மெரினா கடற்கரைக்குச் சென்றார். அங்கு ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்த இடத்தில் 10 நிமிடங்கள் அவருக்காக அஞ்சலி செலுத்தினார். அவருடன் அவரது மனைவி ஷாலினி, ஷாலினியின் தம்பி ரிச்சர்டு, மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க