August 15, 2016
தண்டோரா குழு
இந்திய தலைநகரான புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
வி.ஐ.பி.க்களுக்கான பகுதியில் அமர்ந்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தூங்கி வழிந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக ‘குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியில் விளக்கம் அளித்துள்ள டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ’தூங்கும் அளவுக்குப் பிரதமரின் பேச்சு போர் அடித்திருக்கக்கூடும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.