• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழில்வரி விதிக்க லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

August 16, 2016 தண்டோரா குழு

சேலம் மாவட்டம் வாடப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியான பேளூர் பேரூராட்சியில் பில் கலெக்டராக இருப்பவர் கண்ணன். இவரிடம் அதே பகுதியைச்சேர்ந்த கனகராஜ் என்பவர் தொழில்வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து குறைவான மதிப்பில் தொழில்வரி விதிக்கவேண்டும் என்றால் தனக்கு 1,500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். லஞ்சம் தர மனமில்லாத கனகராஜ் இது குறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர்கள் வகுத்த திட்டப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கனகராஜ் இன்று காலை கண்ணனிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வாங்கியவுடன் மறைந்திருந்த டி.எஸ்.பி சந்திரமௌலி தலைமையிலான லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர்.

மேலும் நீண்ட விசாரணைக்குப்பின் அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால் பேளூர் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க