• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையில் சுரங்கப் பாதை.. ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டியது கண்டுபிடிப்பு

August 18, 2016 தண்டோரா குழு

வட மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்குக் கீழ் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சுமார் 150 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது 1885ம் ஆண்டு கட்டப்பட்டு இவ்வளவு நாள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்த சுரங்கப்பாதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள மகாராஷ்டிர ஆளுநர் மாளிகையின் கீழ் உள்ள இந்த சுரங்கப் பாதையின் நுழைவு வாயிலில் சுமார் 20 அடி உயர இரும்பு கதவு உள்ளது.அதனைத் தாண்டி உள்ளே சென்றால் சுமார் 13 அறைகளும், ஆயுதங்கள் சேமிக்கும் கிடங்கும் உள்ளன.

மேலும், இந்த சுரங்கப்பாதையை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட குழு, நேற்று பார்வையிட்டனர்.வரலாற்றுச் சின்னமான இந்த சுரங்கப்பாதையை, அதன் பாரம்பரியம் மாறாமல் பாதுகாக்குமாறு, பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், சுரங்கப்பாதையில் காற்று வசதி, வெளிச்சத்திற்கான வசதி, கழிவு நீர் செல்லும் பாதை என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதை பார்வையிட்ட ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சுரங்கப்பாதை மூடப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க