• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கார்களை திரும்பப் பெற்று வருகிறது மாருதி சுசூகி நிறுவனம்.

June 2, 2016 தண்டோரா குழு

கார் நிறுனங்களின் முன்னணி நிறுவனமான மாருதி சுசூகி நிறுவனம் தனது பலீனோ மற்றும் டிசையர் ரக கார்களை மேம்படுத்தும் விதமாக சுமார் 77,380 கார்களை திரும்பப் பெற்று வருகிறது.

இது குறித்து அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாருதி சுசூகி நிறுவனம் ஏற்றுமதி செய்த சுமார் 17,231 கார்கள் உள்பட, கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மே 17ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 75,419 பலீனோ ரக கார்களில் உள்ள காற்றுப் பையை கட்டுப்படுத்தும் மென்பொருளை மேம்படுத்தும் வகையில் அந்த கார்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

மேலும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 22ம் தேதி வரை தயாரிக்கப்பட்ட 15,995 பலீனோ ரக டீசல் கார்களில் உள்ள எரிபொருள் வடிகட்டியை மாற்றுவதற்காக அந்த கார்கள் திரும்பப் பெறப்படுகிறது.

அதே போல், 1,961 டிசையர் ரக டீசல் கார்களில் எரிபொருள் வடிகட்டியை ஆராய்ந்து மாற்றுவதற்காகவும் திரும்பப் பெறப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மாருதி சுசூகி விநியோகஸ்தர்களை கடந்த 31ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் மாருதி சுசூகி நிறுவனம் கூறியிருந்தது.

மேலும் படிக்க