• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனாவில் தியன்கோங்-2 ஆய்வுக் கூடம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

September 17, 2016 தண்டோரா குழு

சீனா கடந்த 2011 செப்டம்பரில் தியன்கோங்-1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை விண்ணில் செலுத்தியது.இந்த ஆய்வுக் கூடத்தில் சீனாவை சேர்ந்த விண்வெளி வீரார்கள், கடந்த 2012 ஜூனில் 8 நாட்கள் மற்றும் 2013ல் 12 நாட்களும் தங்கி இருந்து விட்டு பூமிக்கு திரும்பி உள்ளனர்.இதன் காலம் கடந்த மார்ச் மாதத்தோடு முடிவடைந்ததால் அடுத்த ஆண்டு பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சீனா தியன்கோங்-2 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தை சீன விண்வெளி ஆய்வு மையம் நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.மேலும் இந்த ஆய்வுக் கூடத்துக்கு வரும் அக்டோபரில் 2 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் தியான்கோங்-2 ஆய்வு கூடத்தில் 30 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் சீன விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்ப ஏதுவாக புதிய விண்கலத்தை அந்த நாடு ஏற்கெனவே தயார் நிலையில் வைத்துள்ளது. ‘மார்ச் 7’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விண்கலம் கடந்த ஜூனில் ஆட்கள் இல்லாமல் விண்வெளி சென்றுவிட்டு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க