• Download mobile app
11 Feb 2025, TuesdayEdition - 3289
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பள்ளியில் வடமாநில தொழிலாளர்களை தங்க வைக்க பெற்றோர்கள் எதிர்ப்பு

October 9, 2018 தண்டோரா குழு

கோவை மதுக்கரையில் அரசு உதவி பெறும் பள்ளி வளாகத்தில் வடமாநில தொழிலாளர்களை சிமெண்ட் ஆலை நிர்வாகம் தங்க வைத்துள்ளதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ACC சிமென்ட் ஆலை வளாகத்தில் ACC மிடில் ஸ்கூல் என்ற அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் வடமாநில தொழிலாளர் வருகை உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் எண்ணிக்கையானது படிப்படியாக குறைந்து தற்போது 52 மாணவ,மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள்.

பள்ளி வளாகத்தில் உள்ள 15 வகுப்பறைகளில் 7 வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கக்கூடிய நிலையில்,காலியாக உள்ள மற்ற வகுப்பறைகளில் வடமாநில இளைஞர்களை ஆலை நிர்வாகம் தங்க வைத்துள்ளது.கடந்த 10 நாட்களாக வடமாநில இளைஞர்கள் பயன்பாட்டில் இல்லாத வகுப்பறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,பள்ளி வகுப்பறைகள் முழுவதும் வடமாநில இளைஞர்கள் பயன்படுத்திய மதுபாட்டில்கள் சிதறி கிடப்பத்தாகவும்,வகுப்பறைகளில் தங்கியிருக்கக் கூடிய வடமாநில இளைஞர்கள் அரை குறை ஆடைகளுடன் சுற்றுவதுடன்,பள்ளி வளாகத்திலேயே மது அருந்துவதும், புகைபிடிப்பதுமாக போதையில் இருப்பதால் பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாகவும் இது குறித்து ஆலை நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க