• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சிறுவாணி குறுக்கே அணை கட்ட, கோவை மலையாள சங்கங்கள் எதிர்ப்பு

September 3, 2016 தண்டோரா குழு

சிறுவாணி குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கேரளாவுக்கு கோவையைச் சேர்ந்த மலையாள சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 42 மலையாள சங்கங்கள் ஒன்றிணைந்து கோயமுத்தூர் மலையாள சமாஜம் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.அப்போது, சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி கேரள முதல்வரிடம் மனு அளிக்கப்போவதாக கோயமுத்தூர் மலையாள சமாஜம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கேரளா அணைக்கட்டும் செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக மலையாள சங்கங்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், அணைக்கட்டும் திட்டத்தைக் கேரள அரசு கைவிட வேண்டும் எனவும் இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மக்களுக்குக் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காத அவல நிலை ஏற்படும் எனவும் கேரள அரசை வலியுறுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, ஓணம் பண்டிகை முடிந்தவுடன் கேரள முதல்வரைச் சந்தித்து சிறுவாணி குறுக்கே அணைக்கட்டும் திட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தப் போவதாக கூறினர்.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கேரளா முதல் கட்ட பணியைத் தொடங்கி உள்ளது. அணைக்கட்ட திட்டமிடப்பட்டுள்ள பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க