• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் அவதாரம் எடுத்தார் தனுஷ்

September 7, 2016 தண்டோரா குழு

திரையிலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு கோணங்களில் தன் திறமையை நிரூபித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழில் வெற்றிமாறனின் கனவு திரைப்படமான வடசென்னை, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது நடிகர் ராஜ்கிரனை வைத்து தனது முதல் படத்தை இயக்கவுள்ளார்.

மேலும்,இப்படத்துக்கு ‘பவர் பாண்டி’என தலைப்பு வைத்துள்ள தனுஷ் இதன் முதல் பார்வை போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். தமிழில் வாயைமூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்திலும் வெற்றி வாகைச் சூடிய தனுஷ், இயக்கத்திலும் வெற்றிபெறுவார் என கருதப்படுகிறது.

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகம் ஆனார்.அதைப்போல் இன்று ராஜ்கிரனை இயக்கி இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ்.

மேலும் படிக்க