September 15, 2016
தண்டோரா குழு
அந்தமான் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இது போர்ட்பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்தது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு வந்தனர்.இந்நிலையில் மீண்டும் காலை 8.30 மணிக்கு ஒரு முறை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.இதுவும் 5 என்ற அளவிலேய ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது. அப்போது கடல் எப்போதும் போல் இல்லாமல் சற்று சீற்றமாகவே இருந்தது.ஆனாலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. சுனாமி அபாயம் இல்லை என்று தெரிய வந்துள்ளது.