• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உவரியில் சப்பர பவனியின் போது மின்சாரம் தாக்கியதில் 4 பேர் பலியாகினர்

September 8, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் பரதர் உவரியில் மாதா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். சப்பரம் வீதி உலா வந்த போது, தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இதனால் சப்பரத்தை தாங்கிச் சென்ற பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு ஆளாகித் தூக்கி வீசப்பட்டனர்.

இதில், ராஜா (29), கிளைவ் (28), ராஜா (31), நிமோ (18), ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் விபத்தில் இறந்த நான்கு பேருக்கும் தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க