• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெரு பூனைகளுக்கு உணவு கொடுத்ததற்காக துப்பாக்கியால் சுட்ட 70 வயது மனிதர்

May 25, 2016 தண்டோரா குழு

அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் புறாக்களும் சிக்காகோ நகரில் எலிகளும் அதிகமாக உள்ளது. அதே போல் மியாமி நகரில் பூனைகள் அதிகமாகக் காணப்படுகிறது.

அங்கு உள்ள மக்களுக்குப் பூனைகள் என்றால் அலாதி பிரியம். தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இணையாக தங்களுடைய செல்லப் பிராணியான பூனை மீது தங்கள் பாசத்தைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுடைய செல்ல பிராணிக்கு எவ்வாறு உணவு அளிக்கின்றனரோ அதே போல தனிக் காட்டு ராஜாவாக வெளியில் சுற்றித்திருந்தி கொண்டிருக்கும் பூனைகளுக்கும் உணவு கொடுப்பதை ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் பூனைகளை விரும்பாத அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவது சகஜமானது தான். மியாமி போன்ற நகரில் சண்டைகளும் வாக்குவாதங்களும் துப்பாக்கிக் குண்டுகள் தான் பதில் அளிக்கும். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.

அறியோல் கிரசியா மற்றும் ஆனா பெரேஸ் தம்பதினர் மியாமி நகரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் தினமும் தெருவில் இருக்கும் பூனைகளுக்கு உணவு தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அவ்வாறு அவர்கள் பூனைகளுக்கு உணவு தருவதை 70 வயது நிரம்பிய அவர்களுடைய பக்கத்து வீட்டுக்காரரான ஜோஸ் எஸ்ட்ரடா விரும்பவில்லை. இதனால் இரண்டு குடும்பதிருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டு இருந்தது. கடந்த வாரம் சண்டை அதிகமானதால் ஜோஸ் தன்னுடைய பொறுமையை இழந்த நிலையில் துப்பாக்கியை எடுத்து அறியோல் தம்பதியினரை நோக்கிச் சுட்டார்.

இதைக் கேள்விப்பட்ட காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பூனைகளைக் குறித்து திட்டிக்கொண்டு இருந்த எஸ்ட்ரடா வீட்டின் கதவில் நின்று கொண்டு இருந்த எங்களைத் துப்பாக்கியால் சுட்டார். அவருடைய தாக்குதலில் இருந்து தப்பித்து அவருடைய செய்கையை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்ததாக கிரசியா காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

நல்ல வேலையாக யாருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை. ஆனால் ஜோஸ் துப்பாக்கியால் சுட்டதால் கிரசியாவின் வீட்டின் முன் அரை முழுவதும் துப்பாக்கி குண்டுகளால் சேதம் அடைந்து இருந்தது.

இதையடுத்து எஸ்ட்ரடா தான் துப்பாக்கியால் சுட்டதை ஒத்துக்கொண்டதோடு, படுக்கையின் கீழ் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்துக் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

பின்னர் கொலை செய்ய முயற்சி செய்ததற்காக எஸ்ட்ரடாவை காவல் அதிகாரிகள் கைதி செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோஸ் ஜாமீனில் வெளியே வர 10,000 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்றும் கிராசியாவின் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த வழக்கு முடியும் வரை வீட்டுக் காவலில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். பூனைக்கு உணவு வைத்ததற்காகத் துப்பாகியால் சுட்ட விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க