• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இயக்குனர் மணிரத்தினம் அலுவலகத்தில் தீ விபத்து

August 9, 2016 தண்டோரா குழு

ரோஜா, தளபதி, நாயகன், கடல், ராவணன் போன்ற பல்வேறு படங்களை இயக்கியவர் மணிரத்தினம். இவர், ஆழ்வார் பேட்டையில் உள்ள வீனஸ் காலனியில் வசித்து வருகிறார்.

மணிரத்தினம் தற்போது நடிகர் கார்த்தியை வைத்து காற்று வெளியிடை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார் பேட்டையில் மூன்று தளங்கள் கொண்ட அவரது வீட்டில், தரைதளத்தின் கீழே மணிரத்தினம் புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றை அமைத்து வருகிறார்.

தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை, அவருக்குச் சொந்தமான மெட்ராஸ் டாக்கீஸ் டப்பிங் தியேட்டரில் உள்ள ஏசி மிஷின் திடீரென தீப்பிடித்ததில், தீ மளமளவெனப் பரவி எரிய ஆரம்பித்தது.

டப்பிங் தியேட்டரில் உள்ள தொழில்நுட்ப கருவிகளும் தீயில் கருகியது. இதைப்பார்த்த அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். மேலும் உடனடியாக தீயணைப்புதுறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கருவிகள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. மேலும், இந்த தீ விபத்து குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க