• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளியே பயிரை மேய்ந்த கதை. வனத்துறையினர் சஸ்பென்ட்

August 6, 2016 தண்டோரா குழு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வனப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் வைரக்கல் எனப்படும் பளபளப்பான கற்கள் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தப் பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் அப்பகுதியில் அந்தக் கற்களைத் தேட வனத்துறையினர் தடை விதித்துள்ளதோடு, மனிதர்கள் அப்பகுதியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் சமீபகாலமாக அடிக்கடி சிலர் உள்ளே சென்று வைரக்கல் எனப்படும் பளபளப்பான கற்களைத் தேடி வந்தனர். இது குறித்து தகவலறிந்த உயரதிகாரிகள் நடத்திய ரகசிய தேடுதல் வேட்டையில், வைரக்கல் தோண்ட முயற்சித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு வனக்காப்பாளர்களே துணைபோனது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வனக்காப்பாளர்கள் அசோக்குமார், கர்ணன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் காஞ்சனா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்குப் பெயர்தான் வேலையே பயிரை மேய்வதோ?

மேலும் படிக்க