• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதங்களாக அதிகரிப்பு. முதல்வர் அறிவிப்பு

September 1, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.மேலும் சென்னையில் கூடுதலாக 100 சிற்றுந்துகளை இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பல்வேறு அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அறிவித்து வரும் தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பல்வேறு வாக்குறுதிகளை அதே விதியின் கீழ் அறிவித்து வருகிறார்.

அதில் அரசுப்பணியில் உள்ள மகளிருக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் எனக் கூறியதை நிறைவேற்றும் வகையில் இன்று மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார்.இது அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

மேலும் படிக்க