• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாட்சி தேர்தல் ரத்து தொடரும்- உயர்நீதிமன்றம்

October 18, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் தர தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், பழங்குடியினருக்கு முறையாக இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனவும் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான விசாரணையில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க இயலாது என்று கூறியுள்ளார். மேலும், இந்த உத்தரவு 4 வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அதற்குள் தமிழக அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் படிக்க