• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை கண்டறிந்த இந்திய சிறுவன்

August 29, 2016 தண்டோரா குழு

ஐக்கிய ராஜ்யத்தின் தலைநகரான பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மிகவும் தீவிரமான,மருந்துகளுக்குக் கட்டுப்படாத மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளார்.

பொதுவாக மார்பக புற்றுநோய் உருவாகுவதற்கு ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் உள்ளிட்ட ஹார்மோன்கள் காரணமாக உள்ளன.இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், இந்தப் புற்றுநோயின் உயிரணுக்கள் வளர்வதை டமோக்சி பென் போன்ற மருந்துகள் மூலம் எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

எனினும்,3 எதிர்மறை மார்பக புற்றுநோயை மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது.அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கிய கூட்டு மருத்துவ முறையில் தான் சிகிச்சை அளிக்க முடியும்.

இந்தச் சிகிச்சை முறைகளில் நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பும் குறைவானது.இந்நிலையில், இந்த வகை புற்றுநோய்க்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம்(16) கண்டுபிடித்துள்ளார்.இது குறித்து அவர் பேசும் போது,மருந்துக்குக் கட்டுப்படாத புற்று நோய்களை மருந்துகளுக்குக் கட்டுப்பட வைக்கும் சிகிச்சை முறையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தேன்.

என்னுடைய ஆராய்ச்சியை என்னுடைய பள்ளியில் உள்ள ஆய்வுகூடத்திலும் மற்றும் வீட்டிலும் செய்தேன்.அதன் பலனாக,இது வரை மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.மேலும், அவர் இந்த ஆய்வை உருவாக்க அறிவியல் சமூகத்தின் உதவி கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

மேலும், இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையையும் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

மனநிலை பாதிப்பு (அல்ஸீமர்) நோயை முன்கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டுபிடித்ததற்காக கடந்த ஆண்டு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க