• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்து மனைவிக்கு அவரது முறைப்படி இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் கணவர்

July 28, 2016 தண்டோரா குழு

சாதி,மதம் என மனிதர்களுக்கிடையே நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்து வரும் வேளையில் சாதி மதங்களை விடக் காதலுக்கு அன்பு அதிகம் என்பதை எடுத்துரைக்கும் விதமாக ஒரு சம்பவம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் லியாகத்அலிகான்(72). இவர் 36 ஆண்டுகளுக்கு முன்பு கிருபா தேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

லியாகத் அலிகான் ஏற்கவே திருமணம் ஆனவர், இருப்பினும் கிருபா தேவி லியாகத் குடும்பத்துடனே வசித்து வந்துள்ளார். கிருபா தேவிக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால், லியாகத் அலிகானின் முதல் மனைவியின் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் வளர்த்து வந்துள்ளார்.

என்னதான் முஸ்லீம் கணவருக்கு மனைவியாக இருந்தாலும், கடைசி வரை இந்து மதத்தையே கிருபாதேவி பின்பற்றிவந்துள்ளார். மேலும், லியாகத் அலிகான் குடும்பத்தினரும் அனைத்து இந்து பண்டிகைகளை கொண்டியுள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கிருபா தேவி மரணமடைந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றுள்ளது. கடைசி வரை இந்து முறைப்படியே வாழ்ந்த தனது காதல் மனைவி கிருபா தேவியின் இறுதிச் சடங்கை இந்து முறைப்படியே முன்னின்று நடத்தியுள்ளார் லியாகத் அலிகான். மேலும், கிருபா தேவியின் சிதைக்கு அவரே தீ மூட்டியும் உள்ளார்.

மதத்தாலும், சாதியாலும் பிரிந்து வாழும் மனிதர்கள் மத்தியில் காதலுக்கு மதங்கள், சாதிகள் கிடையாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

மேலும் படிக்க