• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

படியில் நின்றவரை இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுனருக்கு அடி

August 5, 2016 தண்டோரா குழு

நேற்று மாலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து புல்வாய் கரைக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அதில் படியில் பயணம் செய்த ஒருவரை ஓட்டுனர் சேகரன் திட்டி கீழே இறக்கிவிட்டு விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை புல்வாய் கரையில் இருந்து நாங்கூர் நோக்கி வந்த பேருந்தை ஒட்டி வந்த டிரைவர் சேகரனை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த கூட்டுறவு சங்க தலைவர் ராமசுப்ரமணி ஓட்டுனரை தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்து மதுரை தலைமை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க