• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டசபையில் இருந்து மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக அகற்றம்

August 17, 2016 தண்டோரா குழு

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தொடர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவாரம் இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு.

இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க உறுப்பினர் திருப்பூர் குணசேகரன், ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டத்தை குறைகூறியும், கிண்டலடித்தும் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க உறுப்பினர்கள் சுமார் அரை மணிநேரத்திற்கு மேல் அமளியில் ஈடுபட்டதால் சபையை தொடர்ந்து நடத்த முடியாமல் சபாநாயகர் தவித்து வந்தார்.

ஒருகட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே சபை காவலர்களை அழைத்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினை சபை காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கிவந்து அவைக்கு வெளியே விட்டனர்.இதையடுத்து இன்று சபையில் இருந்த தி.மு.கவின் 88 உறுப்பினர்களும் வெளியேறினர்.

பின்னர் ஓ.பன்னீர் செல்வம் கொண்டு வந்த தி.மு.க உறுப்பினர்கள் சஸ்பென்ட் தீர்மானத்தை சபாநாயகர் உடனடியாக ஏற்றுக்கொண்டு, 88 உறுப்பினர்களையும் ஒருவார காலத்திற்கு சஸ்பென்ட் செய்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திட்டமிட்டே வெளியேற்றப்பட்டுள்ளோம். வரும் காவல்துறை மானியத்தின் மீது நடைபெறும் விவாதத்தில் நாங்கள் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எனத் தெரிவித்தார்.

மேலும் எதிர்கட்சிகள் இருந்தால் தமிழகத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு பதில் கூற முடியாது என நினைத்தே இது போன்ற நடவடிக்கைகளில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க