• Download mobile app
19 Sep 2024, ThursdayEdition - 3144
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மேட்டுப்பாளையத்தில் புதிய கலைக் கல்லூரி முதல்வர் அறிவிப்பு

August 23, 2016 தண்டோரா குழு

இந்த ஆண்டே மேட்டுப்பாளையத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற கல்வித்துறை மானிய கோரிக்கை முடிந்து முதல்வர் அவர்கள் 110 விதியின் கீழ் பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.அதில் குறிப்பிடும்படியாக தமிழகத்தில் 5 புதிய துவக்கப்பள்ளிகள் திறக்கப்படும்,விழுப்புரம் மற்றும் நீலகிரியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மண்டல மையம் 12 கோடி ரூபாயில் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை அருகே பெரும்பாக்கத்தில் 8.48 கோடி ரூபாயிலும், மேட்டுப்பாளையத்தில் 8.29 கோடி ரூபாயிலும் அரசு கலைக்கல்லூரி புதிதாகத் துவங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் இந்தாண்டுக்குள் 3 துவக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும்,19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்

மேலும் படிக்க