• Download mobile app
16 Sep 2024, MondayEdition - 3141
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்தே பிறந்த தன் குழந்தையுடன் 15 நாட்கள் வாழ்ந்த தாய்

July 27, 2016 தண்டோரா குழு

லின்சே பெல், எல்லாப் பெண்களையும் போலவே தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை எதிர்பார்த்து மிகவும் ஆசையாகக் காத்திருந்த தாய். பொதுவாகவே ஆண்களுக்குப் பெண் குழந்தை மீதும், பெண்களுக்கு ஆண் குழந்தை மீதும் அதீத அன்பும், பாசமும் இருக்கும்.

முன்சூல் வலிப்பு என்பது பிரசவ காலத்தில் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தப் பாதிப்பு ஆகும். இந்த பாதிப்பால் இரத்த அழுத்தம் வேகமாக ஏறும், இறங்கும். இது தாய், செய் இருவருக்கும் ஆபத்தானது. இதனால், லின்சே பெல் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பலவீனமாக இருந்தார்.

சுமார் 28வது வாரம் சிகிச்சைக்கு சென்றபோது, குழந்தைக்குச் சரியான வளர்ச்சி இன்றி காணப்பட்டுள்ளது. பிறகு, 32வது வாரம் வளர்ச்சி சீராக வளர்ந்து வருவதைக் கண்டறிந்தனர். இதனால், மார்க்கும் லின்சே பெல்லும் தங்கள் மகன் ஆரோக்கியமாகப் பிறப்பான் என்று நம்பினர்.

ஆனால் 32வது வாரத்திற்குப் பிறகு குழந்தையிடம் வளர்ச்சி ஏதும் இல்லை. லின்சே பெல்லுக்கு வலி தான் அதிகமாக இருந்தது. அவருக்கு வீட்டிலேயே இரத்த அழுத்தம் சரிபார்க்கப்பட்டது. இரத்த அழுத்தத்தில் மாற்றம் காணும் போதெல்லாம் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் லின்சே பெல்.

ஒரு கட்டத்தில் லின்சே பெல்லுக்கு இரத்த அழுத்தமும் வீக்கமும் அதிகரித்ததால் வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் இந்தக் குழந்தையை கலைத்துவிடலாம் என்று அழுதுள்ளார். மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை நன்கு கருவறையில் நன்கு உலாவி வளர்ந்து வளர்கிறான். அவன் ஆரோக்கியமாகப் பிறப்பான் என்று மார்க் தன் மனைவி லின்சே பெல்லுக்கு ஊக்கமளித்துள்ளார்.

வீடு திரும்பிய சில நாட்களிலேயே, லின்சே பெல்லுக்கு மிகுந்த வலி ஏற்பட்டுள்ளது. தனக்குப் பிரசவ நேரம் நெருங்கிவிட்டதாகக் கருதி தன்னால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார். உடனே, மார்க் மற்றும் இவரது தம்பி மைக்கேல் இருவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் லின்சேவிற்கு சிறுநீர் பரிசோதனை செய்ததில், அவர் உடலில் புரதம் அளவு அதிகமாக இருப்பது தெரியவந்தது. லின்சே பெல் மிகவும் அச்சமுற்றார். மருத்துவர் அவரைப் பரிசோதித்த போது சிசு கருவிலேயே இறந்துவிட்டது என்பது தெரியவந்தது.

மருத்துவர்கள் கருவறையிலேயே டைல்யூட் செய்து அகற்றிவிடலாம் என்று கூறினர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த லின்சே, இறந்தாலும் பரவாயில்லை நான் என் மகனைப் பார்க்க வேண்டும். வெளியே எடுத்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து இறந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். எதிர்பாராத விதமாய் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, லின்சே பெல் இரண்டு நாள் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். மீண்டும் அவர் விழித்தபோது இறந்தே பிறந்த அந்தக் குழந்தையை கெடாமல் ப்ரிசர்வ் செய்து வைத்து லின்சே பெல்லிடம் காண்பித்தனர்.

இதனால், எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் என் குழந்தையை ப்ரிசர்வ் செய்து வையுங்கள். நான் அவனுக்காக நிறையக் கனவுகள் கண்டு வைத்திருந்தேன். அதில் சிலவற்றை அவனுக்கு நான் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கை ஏற்று ரோரியை (அந்தக் குழந்தையின் பெயர்) 15 நாட்கள் ப்ரிசர்வ் செய்து வைத்தனர். இறுதியில் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். வீட்டிற்குச் சென்ற மார்க்கும் லின்சேவும் ரோரிக்கு கதைகள் சொல்லி, புதிய உடைகள் உடுத்தி, ஆசையாக வளர்க்க நினைத்த மகனை மன இறுக்கத்துடன் அடக்கம் செய்தனர்.

மேலும் படிக்க