• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெற்காசியாவில் ஒரே ஒரு நாடு தான் பயங்கரவாதத்தைப் பரப்புகிறது. பிரதமர் மோடி

September 6, 2016 தண்டோரா குழு

பாகிஸ்தான் பெயரைக் குறிப்பிடாமல் ஜி20 நாடுகள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘தெற்காசியாவில் பயங்கரவாதத்தை ஒரேயொரு நாடு தான் பரப்பி வருகிறது’ என்று கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும், இந்த அச்சுறுத்தலை ஸ்பான்சர் செய்பவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ஒரேயொரு தனிநாடு தெற்காசியாவில் நம் பகுதியின் உள்ள நாடுகளில் பயங்கரவாதத்தின் காரணிகளைப் பரப்பி வருகின்றனர் என்றும் கடுமையாக பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதற்கு எதிராக ஜி20யின் சர்வதேச முயற்சிகள் பாராட்டுக்குரியது. அனைத்து நாடுகளும் அதற்கான நிதி நடவடிக்கை பணித்திட்டக் குழுவின் அளவுகோல்களை எட்ட வேண்டும்.

வன்முறை மற்றும் பயங்கரவாத சக்திகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான சவாலை ஏற்படுத்தியுள்ளது. இதனை தங்களது அரசக் கொள்கையாகவே சில நாடுகள் கடைப்பிடித்து வருகிறது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

மேலும், தீவிரவாதத்தை ஒருகாலும் பொறுக்க முடியாத நாடுகளில் இந்தியா முதன்மையானது. நம்மைப் பொறுத்தவரை பயங்கரவாதி என்பவன் பயங்கரவாதிதான் என்று பிரதமர் மோடி. தெரிவித்தார்.

மேலும் படிக்க