• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜன்தன் கணக்குகளில் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும்-இந்திய ரிசர்வ் வங்கி

November 30, 2016 தண்டோரா குழு

கிராம மக்கள் மோசடியாட்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க ஜன்தன் வங்கி கணக்குகளிலிருந்து மாதம் ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்கமுடியும்.
கே.ஒய்.சி. இல்லாத (அதாவது வாடிக்கையாளர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படாத கணக்குகள்) அல்லது டெபாசிட் தொகையை எடுப்பதில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஜன்தன் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்துக்கு ரூ. 5000 மட்டுமே எடுக்க முடியும்.

கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் அதை வெள்ளையாக்க ஜன்தன் கணக்குகளில் டெபாசிட் செய்து வருவதாகப் பரவலாகப் புகார்கள் எழுந்தன. அத்தகைய முயற்சிகளைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையால் அப்பாவி கிராம மக்கள் யாரிடமும் சிக்கி பிநாமி சொத்து பரிவர்த்தனை மற்றும் பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு ஆளாகாமல் தடுக்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க