• Download mobile app
30 Mar 2025, SundayEdition - 3336
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

ஆர்.கே.நகரில் வெற்றி நிச்சயம் – நடிகர் விஷால்

December 4, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர்21 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடவுள்ளார். இதையடுத்து இன்று தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை, ‘மெரினா’ கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால்,

“என்னை தேர்தலில் போட்டியிட கூறி பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் மக்கள் விரும்புகிறார்கள். யாருடைய வாக்கு வங்கியையும் குறிவைத்து அதனை பிரிப்பதற்காக தேர்தலில் போட்டியிடவில்லை” என்று கூறினார். மேலும், 100 சதவீதம் தாம் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தேர்தலில் போட்டியிட ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க