• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பயங்கரவாதிகளிடம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள்

November 22, 2016 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றபட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலையில் பாதுகாப்புப் படையினருக்கும் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இதில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அவர்களிடம் இருந்து இரண்டு ஏகே 47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.15 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளும் இருந்துள்ளன.

இந்நிலையில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளைக் கைப்பற்றிய பாதுகாப்புப் படையினர், அவை கள்ள நோட்டுகளா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு 15 நாட்கள் கூட முழுமையாகக் கடக்காத நிலையில், பயங்கரவாதிகளிடமிருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க