• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகத்தில் வியாழன் மட்டும் ரூ. 480 கோடி பணம் பரிமாற்றம்

November 11, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் ஒரு நாளில் மட்டும் மொத்தம் ரூ. 480 கோடி அளவுக்குப் பணம் வங்கிகளில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ 500, 1000 செல்லாது என அறிவித்தார். நவம்பர் 10 முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதை அடுத்து,பணத்தைச் செல்லுபடியாக்குவதற்காக வங்கிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பொதுமக்கள் தங்களது செல்லாத ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்காக, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் வியாழக்கிழமை குவிந்தனர்.செல்லாத நோட்டுகளுக்குப் பதிலாக செல்லும் நோட்டுகளை வழங்கும் பணி வியாழனன்று தொடங்கியது.

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் சதக்கத்துல்லா சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசியதாவது :

பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வசதியாக ரிசர்வ் வங்கியில் 4 சிறப்பு கவுன்ட்டர்களுடன் மொத்தம் 8 கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு ரூ. 20 கோடி வீதம் ரூ. 5,400 கோடி வந்துள்ளது.

இதில் வியாழக்கிழமை மட்டும் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் ரூ.480 கோடி மதிப்பிலான புதிய நோட்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளன. ஏ.டி.எம். மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் ஒருவர், அதிகபட்சமாக ரூ.2,000 வரை பணம் எடுக்கலாம்.இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் கூறினார்.

மேலும் படிக்க