• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மத்திய அமைச்சர் மீது மை வீசிய மாணவர்கள்

September 17, 2016 தண்டோரா குழு

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்வையிடுவதற்காக வந்த மத்திய அமைச்சர் நாட்டா மீது மாணவர்கள் மை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர்கள் அடிப்படை கட்டமைப்பு வசதி கோரி பல முறை கல்லூரி நிர்வாகம், சுகாதார துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளனர்.எனினும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நாட்டா கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, அமைச்சரிடம் தங்கள் குறைகளை கூற மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் அமைச்சர் அவர்களிடம் பேசமால் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவர் மீது மை வீசினர்.

இதையெடுத்து, அமைச்சரை மாணவர்களிடம் இருந்து மீட்ட அதிகாரிகள், அங்கிருந்து பாதுகாப்பாக, அழைத்துச் சென்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். அமைச்சர் மீது மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க