• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டு மீதான தடை தொடரும் – உச்ச நீதிமன்றம்

November 16, 2016 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடர்வதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாடாக ஜல்லிக்கட்டு போற்றப்படுகிறது. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்கின ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு ஆதரவு அளித்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இதனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த தடைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இத்தடைக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.

இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், தமிழக அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் “குதிரைப்பந்தயங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. பட்டாசுகளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பப்பினர்.

இதற்கு விளக்கம் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “ஜல்லிக்கட்டைப் பொழுதுபோக்காக நடத்த முடியாது, மத ரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது; ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது. ஆகையால், தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என தெரிவித்தனர்.

மேலும் படிக்க