August 3, 2018
தண்டோரா குழு
தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள மலம்புழா அணை நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியதால்,அணையில் இருந்த நான்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக கேரளா எல்லையோரம் மலம்புழா அணை அமைந்துள்ளது.கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இந்த அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது.
இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இந்த அணையின் முழு கொள்ளளவான 150 மீட்டர் அளவை எட்டியதும்,இந்த அணையை கேரளா பொதுப்பணித் துறை அதிகாரிகள் திறந்தனர்.இந்த அணையில் உள்ள நான்கு ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஷட்டர்களும் வழியாக மெதுவாக தண்ணீர் திறக்கப்பட்ட காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.மேலும் இரவு நேரங்களில் கலர் மின்விளக்கு அலங்காரங்களுடன் ரம்மியமாக அணை காட்சியளித்தது.
இந்த அணை திறக்கப்பட்டதால் மலம்புழா,புதுப்பெரியாரம்,கத்தே துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் அணை நிரம்பியதால் அப்பகுதியில் உள்ள விவசாயத்திற்கும் குடிநீர் தேவைக்கும் அதிகளவில் பயன்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.