August 19, 2016
தண்டோரா குழு
போதை மருந்து சர்ச்சையில் சிக்கிய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ், 4 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அவரது ஒலிம்பிக் மல்யுத்த கனவு முடிவுக்கு வந்தது.
இது தொடர்பாக நரசிங் யாதவ் கூறுகையில், இந்த முடிவு காரணமாக நான் சீர்குலைந்து போயுள்ளேன்.கடந்த இரண்டு மாதமாக மனக்கஷ்டத்தில் இருந்த நான், நாட்டிற்காக விளையாடுவது என்ற எண்ணம் என்னை ஊக்கப்படுத்தியது.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காகப் பதக்கம் வெல்வது என்ற எனது கனவு, எனது முதல் போட்டி துவங்கும் 12 மணி நேரத்திற்கு முன் பறிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் நான் நிரபராதி என்பதை நிரூபிக்க என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன். இதற்காக நான் போராட உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.