• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருச்சியில் விவசாயிகள் நூதன போராட்டம்

September 9, 2016 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளுக்கு உதவி புரியாத மத்திய அரசைக் கண்டித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் உரிய நீரை வழங்காத கர்நாடக அரசைக் கண்டித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வாழ்வாதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குருவை சாகுபடிக்கு நீர் திறக்கப்படவில்லை. மேலும் தற்போது கர்நாடகாவில் இருந்தும் நீர் திறக்கப்படாததால் சம்பா சாகுபடியும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது.

இதையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் நீர் திறக்க உத்தரவிட்டபின்னும் நீரைத் திறக்க மறுத்து வரும் கர்நாடக அரசைக் கண்டித்து இன்று வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தினர்.காலை திருச்சி காவிரி ஆற்றில் உள்ள மணல் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட சங்கத்தினர் குழி தோண்டி அதில் படுத்துக்கொண்டு மரணக்குழியில் படுக்கும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்ததால் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் படிக்க