October 26, 2016
தண்டோரா குழு
இறந்தவர்களை தகனம் செய்வது குறித்து ஒரு புதிய வழிகாட்டுதலை கத்தோலிக்க தலைமையகமான வாடிகன் அறிவித்துள்ளது.
ரோமன் கத்தோலிக்க பிரிவில் இறந்தவர்களைப் புதைப்பதே பெரும்பாலும் நடக்கிறது. ஒரு சிலர் தகனமும் செய்கிறார்கள். அப்படி தாங்கள் மிகவும் நேசித்தவர்களின் உடலை எரியூட்டிய பிறகு, அதன் சாம்பலை வீட்டில் வைத்துக் கொள்வதும் தூவுவதும் செய்கிறார்கள். இவ்வாறு செய்ய வேண்டாம் என்று வாடிகன் வலியுறுத்தியுள்ளது.
மாறாக, தகனம் செய்யப்பட்டோரின் சாம்பலைத் தேவாலயத்துக்கோ, கல்லறைக்கோ அனுப்பவேண்டும் என்றும் வாடிகன் கேட்டுக் கொண்டுள்ளது. அவைதான் சேமிப்பை அர்ப்பணிக்க புனிதமான இடம் என்கிறது வாடிகன்.
இறந்தவர்களை நல்லடக்கம் செய்வதைத்தான் ரோமன் கத்தோலிக்க திருச்சபை விரும்புகிறது என்றாலும் , அது 1960ம் ஆண்டு முதல் தகனம் செய்வதற்கும் அனுமதி அளித்துள்ளது. அதையடுத்து, தகனம் செய்வது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவரவர் முடிவு செய்கிறார்கள். அதற்காகவே புதிய வழிகாட்டுதலை வாடிகன் அறிவித்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆலோசகராக இருந்த ஆன்டன் பாலசிங்கம் லண்டனில் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். அவரது உடல் எரியூட்டப்பட்டது.