September 30, 2016
தண்டோரா குழு
முதல்வர் குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தமிழச்சி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.இதற்காக பிரான்ஸ் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன் என தமிழச்சி கூறியுள்ளார்.
முதலமைச்சர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் நேற்று முகநூலில் தமிழச்சி என்ற பெண், முதல்வர் இறந்துவிட்டதாக அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, முதல்வர் குறித்து தவறாக அவதூறு பரப்பியதால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ராமசந்திரன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தமிழச்சி மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி,
சென்னை போலீஸ் என் மீது வழக்கு பதிவு செய்ததை வரவேற்கிறேன். ப்ரெஞ்ச் போலீஸ் விசாரணைக்காக காத்திருப்பேன். உண்மைகள் வெளிவர எனக்கு கிடைத்த வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை கருதுகிறேன் என முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார்.