• Download mobile app
20 Sep 2024, FridayEdition - 3145
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வானதி சீனிவாசனுக்கு ‘ஐ லவ்யூ’ சொன்ன நபருக்கு ரூ. 500 அபராதம் !

September 18, 2016 தண்டோரா குழு

தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபருக்கு 500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் 66வது பிறந்த நாளையொட்டி நேற்று கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் பாஜக சார்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில், அக்கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டனர்.

அப்போது,கையில் பூங்கொத்துடன் ஒருவர் வானதியுடன் புகைப்படம் எடுக்க வந்தார்.ஆனால் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் வானதியின் கையில் பூங்கொத்து கொடுத்து தனது காதலை தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு வானதி சீனிவாசனும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அந்நபரை கட்சி நிர்வாகிகள் பிடித்து அடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்நபரின் பெயர் முத்துவேல் என்றும், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.மேலும், முத்துவேல், பாஜக உறுப்பினர் ஆவார்.

இச்சம்பவம் தொடர்பாக வானதி சீனிவாசன் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை. இருப்பினும் பொது இடத்தில் அத்து மீறுதல், அநாகரிகமாக நடந்து கொள்ளுதல் ஆகிய சட்டப்பிரிவுகளில் முத்துவேல் மீது உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைதொடர்ந்து கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் முத்துவேல் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ரூ. 500 அபராதமாக விதிக்கப்பட்டது. இதையெடுத்து அபராதத் தொகையை கட்டிய முத்துவேல் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க